முதல் காரை உருவாக்கிய பென்ஸ்
1886ல் தான் இன்றைய நவீன பெட்ரோல் கார்களுக்கான அடித்தளம் உருவானது. ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் பென்ஸ் என்பவர், பெட்ரோலில் இயங்கும் முதல் காரைக் கண்டுபிடித்தார். நம்மூர் ரிக்ஷாக்களைப் போல் மூன்று சக்கரங்கள் கொண்டதாக முதல் கார் இருந்தது. இதை கார்ல் பென்ஸ், பேட்டன்ட் மோட்டார் கார் என்று பெயரிட்டு அழைத்தார். இவர்தான், முதல் கார் தொழிற்சாலை உருவாக்கி, கார்களை பொதுவிற்பனைக்கு கொண்டு வந்த பெருமைக்கு உரியவர் ஆவார். அந்த முதல் காரில், பாதுகாப்பு மேற்கூரைகள் எல்லாம் அப்போது இல்லை. ஸ்டீரியங் கிராங்க், இருவர் அருகருகில் அமர்ந்து கொள்ள இருக்கை இவைதான் கார். பின் பகுதியில், ஒற்றை சிலிண்டர் கொண்ட இன்ஜின், குளிரூட்டும் நீர்தொட்டி, பிரேக் பட்டைகள் இவை மட்டும்தான். துணியிலிருந்து அழுக்கைப் போக்கும் ‘லிக்ராய்’ என்றழைக்கப்பட்ட பென்சின் திரவம் தான் எரிபொருளாகப் பயன்பட்டது. இதனால் தான், இன்றும் ஜெர்மனியில் இந்த எரிபொருள் வாஷ்பென்சின் என்றழைக்கப்படுகிறது. கார்ல் பென்ஸ், தனது காரில் வெற்றிகரமாக பேட்டரியைப் பயன்படுத்தினார். இதன்மூலம் எலெக்ட்ரிக் ஸ்பார்க் ஏற்படுத்தி எரிபொருளைப் பற்றவைக்க முடிந்தது. அதற்கு முன்ன...