டப்பர்வேர் பார்ட்டிகள்
டப்பர்வேர் பிளாஸ்டிக் டப்பாக்கள் குறித்து பெரும்பாலோனோர் அறிந்து வைத்திருப்போம். முன்னணி பிராண்டுகளில் ஒன்று. இது சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனையாவதை காட்டிலும், டப்பர்வேர் பார்ட்டிகளில்தான் (Tupperware Parties) அதிகம் விற்பனையாகும். அது என்ன பார்ட்டி?. பெண் விற்பனைப் பிரதிநிதிகள், தங்கள் தோழிகளை ஒரு வீட்டில் திரட்டி, டப்பர்வேர் பொருட்களை அங்கு விற்பனை செய்வார்கள். நல்ல விற்பனையாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும். இன்று ஏராளமான நிறுவனங்கள், இதே பாணியைப் பின்பற்றி பொருள் விற்பனை செய்கின்றன. அதற்கு டப்பர்வேர் பார்ட்டிகளே முன்னோடி.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் யேர்ல் டப்பர். 1946ல், தனித்துவமிக்க பிளாஸ்டிக்கை உருவாக்கினார். கருமை நிறம் கொண்ட அந்த பிளாஸ்டிக்கிலிருந்து மோசமான நாற்றம் வீசியது. அதை வைத்து என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது காலம் கழித்தார். பின்னர், அந்த பிளாஸ்டிக்கை டப்பாக்களாக அச்சில் வார்த்து, காற்றுப்புகாத வண்ணம் இறுக்கமான மூடியைப் பொருத்தி, ரெஃப்ரிஜெரேட்டர் டப்பாக்களை வடிவமைத்தார். இவற்றை சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனைக்காக வைத்தார். எனினும், அவரது பிளாஸ்டிக் டப்பாக்கள் பெரிய அளவில் மக்களைக் கவரவில்லை. பிசினஸ் வீக் நாளிதழ், ‘சில்லறை விற்பனை நிறுவனங்களில், டப்பர்வேர் வியாபாரம் மண்ணைக் கவ்வியது’ என்று எழுதியது.
இதனால், துவண்டு போனார் யேர்ல் டப்பர். 1948ல், பிரவுனி வைஸ் என்ற தொழில் ஆலோசகரிடம், தனது பொருட்களின் மந்தமான விற்பனை குறித்து வருத்தப்பட்டார். அந்த பெண்ணுடனான சந்திப்பு டப்பரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. ஆம், பிரவுனி வைஸ், டப்பர் டப்பாக்களை விற்பனை செய்ய புது தந்திரத்தைக் கண்டறிந்தார். அவர், தனது தோழிகளை வீட்டிற்கு வரவழைத்தார். டப்பர் டப்பாக்களின் பிரத்யேக வடிவமைப்பை நன்றாகப் பேசி விளக்கினார். அதைக் கேட்டு அவரது தோழிகள் டப்பாக்களை வாங்கினர். மேலும், அவர்களையும் அவர்களது தோழிகளிடம் இதேபோல் விற்பனை செய்யத் தூண்டினர். அப்படிச் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஆர்வமூட்டினார். இது சங்கிலித் தொடராக மாற, டப்பர் டப்பாக்கள் பெருமளவில் விற்றுத்தீர்ந்தன.
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று, இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்திருந்த காலம். போர் காலத்தில், அமெரிக்க மக்கள் ஒருவொருக்கொருவர் நேரடிப் பழக்கத்தையும், தொடர்பையும் உருவாக்கி வைத்திருந்தனர். இதனால், பெண்கள் ஒன்றுகூடுவது எளிதான காரியமாக இருந்தது. அடுத்த காரணம், பெண்களின் பொருளாதார சுயசார்பு விருப்பம். வீட்டுச் செலவுகளைத் தாங்களே செய்து கொள்ள நல்ல வாய்ப்பை இந்த பிளாஸ்டிக் டப்பா விற்பனை வழங்கியது. இன்று நம்மூரில் கூட, பல பெண்கள் இந்தத் தொழிலை வீட்டில் வைத்து செய்வதைப் பார்க்கலாம்.
– சிவசக்தி
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் யேர்ல் டப்பர். 1946ல், தனித்துவமிக்க பிளாஸ்டிக்கை உருவாக்கினார். கருமை நிறம் கொண்ட அந்த பிளாஸ்டிக்கிலிருந்து மோசமான நாற்றம் வீசியது. அதை வைத்து என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது காலம் கழித்தார். பின்னர், அந்த பிளாஸ்டிக்கை டப்பாக்களாக அச்சில் வார்த்து, காற்றுப்புகாத வண்ணம் இறுக்கமான மூடியைப் பொருத்தி, ரெஃப்ரிஜெரேட்டர் டப்பாக்களை வடிவமைத்தார். இவற்றை சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனைக்காக வைத்தார். எனினும், அவரது பிளாஸ்டிக் டப்பாக்கள் பெரிய அளவில் மக்களைக் கவரவில்லை. பிசினஸ் வீக் நாளிதழ், ‘சில்லறை விற்பனை நிறுவனங்களில், டப்பர்வேர் வியாபாரம் மண்ணைக் கவ்வியது’ என்று எழுதியது.
இதனால், துவண்டு போனார் யேர்ல் டப்பர். 1948ல், பிரவுனி வைஸ் என்ற தொழில் ஆலோசகரிடம், தனது பொருட்களின் மந்தமான விற்பனை குறித்து வருத்தப்பட்டார். அந்த பெண்ணுடனான சந்திப்பு டப்பரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. ஆம், பிரவுனி வைஸ், டப்பர் டப்பாக்களை விற்பனை செய்ய புது தந்திரத்தைக் கண்டறிந்தார். அவர், தனது தோழிகளை வீட்டிற்கு வரவழைத்தார். டப்பர் டப்பாக்களின் பிரத்யேக வடிவமைப்பை நன்றாகப் பேசி விளக்கினார். அதைக் கேட்டு அவரது தோழிகள் டப்பாக்களை வாங்கினர். மேலும், அவர்களையும் அவர்களது தோழிகளிடம் இதேபோல் விற்பனை செய்யத் தூண்டினர். அப்படிச் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஆர்வமூட்டினார். இது சங்கிலித் தொடராக மாற, டப்பர் டப்பாக்கள் பெருமளவில் விற்றுத்தீர்ந்தன.
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று, இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்திருந்த காலம். போர் காலத்தில், அமெரிக்க மக்கள் ஒருவொருக்கொருவர் நேரடிப் பழக்கத்தையும், தொடர்பையும் உருவாக்கி வைத்திருந்தனர். இதனால், பெண்கள் ஒன்றுகூடுவது எளிதான காரியமாக இருந்தது. அடுத்த காரணம், பெண்களின் பொருளாதார சுயசார்பு விருப்பம். வீட்டுச் செலவுகளைத் தாங்களே செய்து கொள்ள நல்ல வாய்ப்பை இந்த பிளாஸ்டிக் டப்பா விற்பனை வழங்கியது. இன்று நம்மூரில் கூட, பல பெண்கள் இந்தத் தொழிலை வீட்டில் வைத்து செய்வதைப் பார்க்கலாம்.
– சிவசக்தி
Comments
Post a Comment