தையத்தா தையத்தா தையல் இயந்திரம்
இன்று நாம் வகைவகையான ஆடைகளை குறைந்த விலையில், அணிந்துகொண்டிருக்க முக்கிய காரணம், தையல் முறையில் நிகழ்ந்த முன்னேற்றமே. கையால் தைத்துக்கொண்டிருந்த நிலையை மாற்றி, ஆடைகளை விரைவாகத் தைக்க சாத்தியமாக்கியது, தையல் இயந்திர கண்டுபிடிப்பு. உலகத் தொழிற்புரட்சி காலகட்டத்தில் நடந்த இம்முக்கிய கண்டுபிடிப்புக்கு, பலர் பங்களிப்பு செய்துள்ளனர். பறவையைப் பார்த்து, விமானத்தைக் கண்டுபிடித்தது போல், கையால் தைப்பதை, எப்படி இயந்திர மயமாக்கலாம் என்ற யோசனையின் விளைவே, தையல் இயந்திரம். கையால் தைக்கும்போது, துணிக்குள் மேலிருந்து கீழே ஊசியை நுழைத்து, மீண்டும் மேலே இழுத்து தைப்போம். ஆனால், இயந்திர முறையில், மேலிருந்து கீழே நுழைத்துவிட்டு, அதை மீண்டும் எப்படி கீழிருந்து மீண்டும் மேலே இழுப்பது என்பதே பெரும் சவாலாக இருந்தது. இதற்காக இரண்டு ஊசி தையல் முறை போன்றவையெல்லாம் உருவாக்கப்பட்டது. எனினும், அவை தைப்பதை மேலும் கடினமாக்கின.
இந்நிலையில், 1790ல், இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் செயின்ட் என்பவர் போட்ட அடித்தளமே, நவீன தையல் இயந்திரத்தின் ஆரம்பமாக கருதப்படுகிறது. இவர், ஊசியை முழுவதுமாக கீழே நுழைக்கத் தேவையற்ற வகையில், இயந்திரத்தை உருவாக்கினார். ஊசி பாதியளவு நுழைந்து, நூலை கீழே தள்ள, அடிப்பாகத்தில் உள்ள வளைவான ஊசி (shuttle hook – ஷட்டில் ஹூக்), அந்த நூலை, கீழே இழுத்து, ஏற்கெனவே கீழே பாபின் (bobbin) என்ற உருளையில் சுற்றி வைக்கப்பட்டுள்ள நூலின் குறுக்கே செல்லும்படி செய்யும். இது மிக விரைவாகவும், துல்லியமாகவும் தையல் வேலையை முடிக்க உதவியது.
தாமஸ் செயின்ட், நவீன தையல் இயந்திரத்துக்கான அடித்தளத்தை அமைத்தாலும், அதை அவருக்குப் பின் வந்த கண்டுபிடிப்பாளர்கள் பலரும், கடின உழைப்பில் மெருகேற்றினர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர், அமெரிக்காவைச் சேர்ந்த எலியாஸ் ஹோவ். பருத்தி இழையை உருவாக்கும் இயந்திரங்களைப் பழுது பார்ப்பதில் நிபுணரான எலியாஸ், 1844ம் ஆண்டு, அக்டோபர் மாதம், ஒரு தையல் இயந்திரத்தை உருவாக்கினார். இது மரம், எஃகு இரும்பு, கம்பி, அதனுடன் பிணைத்தி

தையல் இயந்திரத்தை பொதுமக்கள் பார்க்கும் வகையில,் காட்சியில் வைக்க இங்கிலாந்துக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்க, ஜார்ஜ் பிசர் ஏற்பாடு செய்தார். பெண்களை இவ்வியந்திரம் மிகவும் கவர்ந்தது. ஆனால், இதன் அதிக விலை காரணமாகவும், எப்படி இயக்க வேண்டும் என்ற பயிற்சி இல்லாததாலும், இதனை வாங்க யாரும் முன்வரவில்லை. மறுபுறம் எலியாஸ் மனம் தளராமல் ஒருபக்கம் காப்புரிமைக்காகவும் போராடிவந்தார். காரணம், புதிய இயந்திரங்களுக்கு காப்புரிமைபெற கடும்போட்டி நிலவிய காலகட்டம் அது. தையல் இயந்திரத்தை தயாரிக்க, அவருடைய காலத்திலேயே பல கம்பெனிகள் முயன்று வந்த காலத்தில், தையல் இயந்திரத்தின் காப்புரிமை, தங்களுக்கும் வேண்டும் என்று கிட்டத்தட்ட 80 பேர் மீது வழக்கு தொடுத்தனர். அதில், ஐசாக் சிங்கர், எலியாசுடன் கடுமையாகப் போராடினார். வறுமைக்கு மேல் வறுமை, தோல்விக்கு மேல் தோல்வி என்று கஷ்டப்பட்ட எலியாஸ், 1854ல் தையல் இயந்திரத்துக்காக, காப்புரிமை பெற்றார். எலியாசின் சகோதரர் அமாசா ஹோவ் 1854ல் தையல் இயந்திரத் தொழிற்சாலையைத் தொடங்கினார். எலியாசின் இயந்திரம் உலக மக்களிடையே வரவேற்பை பெற்று, அவரைச் செல்வந்தராக்கியது.
– மு.கோபி
Comments
Post a Comment