ஜோரான சமோசா, சூடான சமோசா


இந்திய பாரம்பரிய உணவு அடையாளங்களுள், சமோசாவுக்கு என்றுமே முன்னுரிமை உண்டு. பாப்பாய் தி செய்லர் மேன் கார்ட்டூனில், கீரையை தின்றால் பாப்பாய்க்கு பலம் வரும். நமதூர் மோட்டூ பட்லூவில், சமோசாவை தின்றால்தான் மோட்டூக்கு பலம் வரும். அந்தளவுக்கு சமோசாவுக்கும் நமக்கும் நெருக்கம். புதினா சட்னியுடன் சேர்த்து பார்த்தாலே, நாவில் நீர் ஊற வைக்கும் சமோசாவுக்கு நீண்ட சுவையான வரலாறு உண்டு.
சமோசாவின் பூர்விகம் ஈரான். சமோசாவின் அசல் பெயர் சன்போஸாக். 11ம் நூற்றாண்டில் பாரசீக வரலாற்று ஆசிரியரான அபுல் ஃபசல் பெய்ஹாக்கி (Abul-Fazl Beyhaqi) என்பவர், தனது நூலில் சமோசா குறித்து எழுதியுள்ளார். ‘வலிமைமிக்க கஸ்னவீது(Ghaznavid ) பேரரசின் சிறப்புமிக்க அவையில், ரம்மியான சுவை கொண்ட சன்போஸாக் பரிமாறப்பட்டது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பகாலத்தில் இறைச்சித்துண்டுகள், பருப்பு கொட்டை வகைகள் மற்றும் உலர்பழங்கள் போன்றவற்றை மிருதுவான மாவில் திணித்து, எண்ணெயில் வறுத்தெடுத்து சமோசா உருவாக்கினார்கள். அது இந்தியாவுக்கு நுழைந்த பிறகு, நம்மூருக்கு ஏற்ப மாற்றம் கண்டுவிட்டது.

13ம் நூற்றாண்டில் இImage result for Samosa Muslimந்தியாவுடன் வணிகத் தொடர்பில் இருந்த மத்திய ஆசிய வியாபாரிகளுடன் சேர்ந்து, சமோசாவும் வந்தது. 14ம் நூற்றாண்டில் டெல்லி வந்திருந்தபோது, ‘முகமது பின் துக்ளக் அவையில் சமோசாவுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.’ என்று புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் இப்னு பதூதா தனது நூலில் குறிப்பிடுகிறார். அந்தளவுக்கு, அரசவை உணவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சமோசா இருந்தது. 
அரசவையில், நெய், வெங்காயம், இறைச்சி, மசாலா சேர்த்து சமோசா செய்யப்பட்டாலும், காலப்போக்கில், சமோசாவின் உள்ளடக்கத்தில் மாற்றம் வந்தது. முக்கோண வடிவத்தை மட்டும் தக்கவைத்துக்கொண்ட சமோசாவில், இறைச்சிக்கு பதிலாக காய்கறிகள் இடம்பெற்றன. கொத்தமல்லி, மிளகு, இஞ்சி என இன்னும் பல மசாலா பொருட்களும் சமோசாவில் சேர்க்கப்பட்டன. ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள் இந்தியாவுக்கு வந்தபோதும், அவர்களும் சமோசாவின் ஈர்ப்பு விசைக்கு தப்பவில்லை.
இன்று பன்னீர் சமோசா, உருளைக்கிழகங்கு சமோசா, மாசி சமோசா, சாக்லேட் சமோசா என்று ஏராளமான சமோசாக்கள் வலம் வருகின்றன. உலகளவில் நாடு வித்தியாசமின்றி சமோசா பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். என்றாலும், அவற்றுள் இந்திய சமோசாவே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. இதற்கு காரணம், இந்தியாவுக்கே உரித்தான புதுமை, கண்டுபிடிப்பு, சகிப்புத்தன்மை போன்ற பண்புகளை சமோசாவும் தனக்குள் ஈர்த்துக்கொண்டதுதான்.
மு.கோபி

Comments